ஏ.பி.சி. ட்ரீம்ஸ் எண்டர்டெய்னர்ஸ் தயாரிக்கும் புதிய படம் ‘செளந்தர்யா’. இந்தப் படத்தின் கதை எழுதி டைரக்ஷன் செய்து உள்ளார் சந்திரமோஹன்.
இயக்குனர் சந்திரமோஹனுடன் ஒரு உரையாடல்.
செளந்தர்யாவில் நடிக்கும் நடிக, நடிகையர்…
புதுமுகங்கள் கோவிந்த், கில்லர் காசிம், ரித்தூஸன், சாரதி, சந்தோஷ், வினித் வினு, சஞ்சுகொட்டேரி என்று பலர் நடிக்க, இவர்களுடன் மாறுபட்ட வேடத்தில் சிரிப்பொலி எப்எம்எஸ் நடராஜன் நடித்துள்ளார்.
செளந்தர்யா என்று பெயர் வைத்திருக்கிறீர்களே, பெண்ணை மையப்படுத்திய கதையா..?
“ஆம்…ஆயுர்வேத வைத்தியசாலையில் மசாஜ் வேலை செய்யும் அழகிய இளம் பெண் செளந்தர்யா. அவள் அழகில் மயங்கும் விமல், அவள் தன்னிடம் அப்படி பழகுவாள் இப்படி நடந்து கொண்டாள் என்று இல்லாத பொல்லாத செய்திகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள, அந்த பொய் செய்தியை நம்பும் நான்கு இளைஞர்கள், செளந்தர்யாவிடம் சென்று தங்களது ஆசைக்கும் இணங்குமாறு வலியுறுத்துகின்றனர். அதற்கு அவள் சம்மதிக் மறுக்கிறாள். இதனால் ஆத்திரம் அடையும் அந்த நால்வரும் அவளை பாலியல் பலாத்காரம் செய்கின்றனர். அந்த வன்முறை தாங்காது செளந்தர்யா உயிரை இழக்கிறாள். பிறகு அவள் ஆவியாக வந்து அவர்களை எப்படி பழி வாங்குகிறாள் என்பதை புதிய ஸ்டைலில் படமாக்கி உள்ளேன்” என்கிறார், இயக்குநர் சந்திமோஹன்.
மேலும் செளந்தர்யாவைப்பற்றிக் கூறுகையில் , “இந்த படத்தை திரிலர் படமாக எடுத்துள்ளேன். இறுதி கட்ட காட்சிகளில் கம்பியூட்டர் கிராபிக்ஸ் மூலம் பிரமிக்க வைக்கிற வகையில் அமைந்து இருக்கிறது. இது பார்ப்பதற்கு புது அனுபவமாக இருக்கும். பின்னணி இசைக்கு முக்கியத்துவம் உள்ள படம் இது. பெரும் பகுதி காட்சிகளில் பின்னணி இசை செம மிரட்டலாக வந்திருக்கிறது. படத்தில் மூன்று பாடல்கள் அருமையாக வந்திருக்கிறது. அதில் “கிட்ட வரவா..” என்கிற பாடலை அதிக ரசிகர்கள் பார்த்து ஆதரித்துள்ளனர். யூ டியூப்பில் அதிக ரசிகர்கள் பார்த்த பாடலாக இந்தப் பாடல் அமைந்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது” என்றார்.
Enjoy nearly 200 pictures from Soundharya at http://www.mysixer.com/?p=19125
படத்தில் பணிபுரியும் தொழில் நுட்பக்கலைஞர்கள் பற்றி..
“இந்தப் படத்திற்கு அஜ்மல் அஜீஸ் என்பவர் இசையமைத்திருக்கிறார். பாடல்களை கவிகுமரன் எழுதி உள்ளார். இயற்கை எழில் சூழ்ந்த பகுதியான ஆனைமலை, ஆனைக்கட்டி, தளிக்குள்ளம் பீச் போன்ற இடங்களில் படமாக்கி உள்ளேன். ரித்திக் சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விறுவிறுப்பான சண்டைக் காட்சிகளை புரூஸ்லி ராஜேஷ் அமைத்திருக்கிறார். வித்தியாசமான நடன காட்சிகளை விஜய ரக்ஷித் அமைத்துள்ளார். பரபரப்பான இந்தப் படத்திற்கு ஆத்மஜன் திரைக்கதை எழுதி இருக்கிறார். சின்னதாக சொன்னாலும் பஞ்ச் வைத்த மாதிரி வசனங்களை தீட்டி உள்ளார், வசனகர்த்தா ஜே.ரமல் பிரபு” என்றார்.
செளந்தர்யா எப்பொழுது திரையை முத்தமிடுவாள் ..?
“இப்போது படத்தின் வேலைகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இம்மாதம் இறுதியில் பாடல் வெளியிட்டு விழா நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து படத்தையும் வெளியிட உள்ளோம். இந்தப் படம் ரசிகர்களுக்கு ஒரு திரில்லர் விருந்து…” என்று படம் பற்றி கூறுகிறார் இயக்குநர் சந்திரமோஹன்.




