குழந்தைகள் உரிமை என்பதை மையக்கருவாக வைத்து நடத்தப்பட்ட ISR – 5 நிமிடக்குறும்பட போட்டியில் இறுதிச்சுற்றுக்கு தேர்வான 11 படங்களில் ஒன்று, செவக்காட்டுச்சிற்பங்கள்.
காலாங்காத்தால எழுந்து ஆடுமேய்க்கச்செல்லும் ஹரிஷ். கழுத்தில் போட்டிருக்கும் துண்டின் ஒருமுனையில் அம்மா கட்டிக்கொடுத்த உணவு, மறுமுனையில் சிலேட்டு. வழியில் சந்திக்கும் தோழி ரோஹிதா, அவனுக்கு அன்றைய பாடத்தை எழுத, செவக்காட்டில் ஆடுமேய்த்துக்கொண்டே அவற்றை எழுதிப்பார்க்கிறான் ஹரிஷ். நல்ல உணர்வுபூர்வமான கற்பனை இயக்குநர் கே டி.
ஆடுமேய்க்கும் சிறுவனுடன் விளையாடுவதை கண்டிக்கும் ரோஹிதாவின் அப்பா. ஹரிஷின் புகாருக்கு செவிமடுக்கும் காவல்துறை, “ குழந்தைகள் அவர்கள் விருப்பப்பட்டவர்களுடன் விளையாடலாம் என்று ஐ நா சபையே சொல்லியிருக்கு..” என்று கண்டிக்கிறார். ரோஹிதாவின் அப்பா தவறை உணர்கிறார். குழந்தைகள் மகிழ்ச்சிக்கடலில்!
செவக்காட்டுச்சிற்பங்கள், குழந்தைகள் என்ன செய்கிறது என்பது தெரியாமலே கண்டிப்பது, தண்டனைக்குரிய குற்றம் என்பதை இக்குறும்படம் அழகாக விவரிக்கின்றது.
Kindly Subscribe and Share our YouTube Channel mysixer for Tamil Cinema News - Thank You