நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, "தேர்தல் முடிவுகள் தனக்கு மகிச்சியினைக் கொடுப்பதாகவும், ஜெயலலிதாவின் வெற்றியால் தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் ரஜினிகாந்த் தனது மகள்கள் ஐஸ்வர்யா, செளந்தர்யா மூலம் அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.
நடிகர் விஜய் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை போயஸ்கார்டனில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’நான் தேர்தலுக்கு முன்பே ஆட்சி மாற்றம் வேண்டும் என்று கூறிவந்தேன். ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதற்காக என் தந்தை அதிமுகவுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் செய்தார். வாக்குப்பதிவு அன்று ஓட்டு போட்டுவிட்டு வெளியே வந்ததும், மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள். அவர்கள் ஆசை நிறைவேற வேண்டும் என்று விரும்புகிறேன் என பேட்டி அளித்தேன். என் ஆசையும் ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதுதான். நான் ஆசைப்பட்டது நடந்துவிட்டது’’ என்று தெரிவித்தார்.