• Home
  • News
  • Movie Reviews
தமிழ்
  • Ajithkumar

    Celebrity
  • Vishal

    Celebrity
  • AR.Rahman

    Celebrity
  • Kamal Haasan

    Celebrity
  • Bharani

    Celebrity
  • Amitabh Bachchan

    Celebrity
  • Soori

    Celebrity
  • Bharath

    Celebrity
  • Close
இயக்குநர் சஞ்சய் நாராயணனின் தைரியத்திற்கு தலை வணங்குகிறேன் – கே.எஸ் ரவிக்குமார்

அதிகம் படிக்கப்பட்டவை

  • தேவா தேவா.. பிரம்மாஸ்திரத்திலிருந்து அடுத்த பாடல்

    தேவா தேவா.. பிரம்மாஸ்திரத்திலிருந்து அடுத்த பாடல்

    1 week ago
  • ஆகஸ்ட் 12 வெளியாகும் விருமன் பற்றி படக்குழுவினர்

    ஆகஸ்ட் 12 வெளியாகும் விருமன் பற்றி படக்குழுவினர்

    1 week ago
  • YMCA Madras & Soroptimist Chennai organises Tree Sapling Planting Event Photos

    4 years ago
  • Kanla Kaasa Kaattappa

    4 years ago
  • Yaksha Fashion Show 2016 by Yaksha Signature Wedding Studio

    4 years ago
  • Chennayil Thiruvaiyaru 11th Edition inauguration stills

    4 years ago
More News

Box Office

  • Baahubali 2

    $8.4 million
  • Guardians of the Galaxy Vol. 2

    $8.4 million
  • Nagarvalam

    $8.4 million
  • Ilai

    $8.4 million
  • Enga Amma Rani

    $8.4 million
  • Florence Foster Jenkins

    $8.4 million

Top Movies

  • 90% மேதகு 2
  • 60% விருமன்
  • 80% கடாவர்
  • 80% லால் சிங் சட்டா
  • 70% கடமையை செய்
  • 70% எமோஜி
  • 70% Victim இணையதொடர்
  • 100% சீதா ராமம்
  • 70% காட்டேரி
  • 70% எண்ணித்துணிக
  • 70% பொய்க்கால் குதிரை
  • 80% லெஜண்ட்
  • 90% பேப்பர் ராக்கெட்
  • 80% குலு குலு
  • 90% விக்ராந்த் ரோணா
  • 70% பேட்டரி
  • 90% ஜோதி
  • 60% நதி
  • 80% மஹாவீரயர்
  • 60% மஹா
  • 80% தேஜாவு
  • 100% இரவின் நிழல்
  • 90% கார்கி
  • 80% நிலை மறந்தவன்
  • 70% தி வாரியர்
  • 90% மை டியர் பூதம்
  • 90% தோர் லவ் அண்ட் தண்டர்
  • 100% ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்
  • 70% யானை
  • 70% அன்யா’ஸ் டுடோரியல்
  • 60% D Block
  • 60% பட்டாம்பூச்சி
  • 70% வேழம்
  • 80% மாமனிதன்
  • 80% மாயோன்
  • 60% அம்முச்சி 2
  • 80% சுழல்
  • 100% 777 சார்லி
  • 90% வாய்தா
  • 50% விஷமக்காரன்
  • 60% போத்தனூர் தபால் நிலையம்
  • 60% நெஞ்சுக்கு நீதி
  • 60% முத்துநகர் படுகொலை
  • 60% ரங்கா
  • 70% DON
  • 70% ஐங்கரன்
  • 90% அக்கா குருவி
  • 70% விசித்திரன்
  • 0% கூகுள் குட்டப்பா
  • 60% கதிர்
  • 70% பயணிகள் கவனிக்கவும்
  • 100% Oh My Dog
  • 50% இடியட்
  • 60% மன்மத லீலை
  • 60% Morbius
  • 80% Selfie
  • 90% ஹே சினாமிகா
  • 80% வலிமை
  • 70% Uncharted
  • 50% வீரபாண்டியபுரம்
  • 100% கடைசி விவசாயி
  • 50% சாயம்
  • 100% சினம் கொள்
  • 70% கார்பன்
  • 100% அன்பறிவு
  • 60% ஓணான்
  • 70% லேபர்
  • 50% சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை
  • 100% ராக்கி
  • 50% தள்ளிப்போகாதே
  • 70% ஆனந்தம் விளையாடும் வீடு
  • 70% ரைட்டர்
  • 100% 83
  • 70% Blood Money
  • 70% தூனேறி
  • 90% Bachelor
  • 90% Bachelor
  • 50% வனம்
  • 40% ₹2000
  • 90% Maanaadu மாநாடு
  • 70% சபாபதி
  • 70% ஜாங்கோ
  • 70% பொன் மாணிக்கவேல்
  • 70% Operation JuJuPi
  • 60% அகடு
  • 60% உடன்பிறப்பே
  • 50% சிவகுமாரின் சபதம்
  • 100% ருத்ர தாண்டவம்
  • 70% Jungle Cruise
  • 50% நடுவன்
  • 100% சூ மந்திரகாளி
  • 50% வீராபுரம்
  • 100% ஆறாம் நிலம்
  • 50% அனபெல் சேதுபதி
  • 60% பிரண்ட்ஷிப்
  • 100% கோடியில் ஒருவன்
  • 80% கசடதபற
  • 70% திட்டம் இரண்டு
  • 50% Call Taxi
  • 46% காடன்

இயக்குநர் சஞ்சய் நாராயணனின் தைரியத்திற்கு தலை வணங்குகிறேன் – கே.எஸ் ரவிக்குமார்

2 months ago Mysixer

21 வயதே ஆன அறிமுக இயக்குநர் சஞ்சய் நாராயணன் இயக்கத்தில், An every frame matters production தயாரிப்பில் முழுக்க புதுமுக நடிகர் நடிகைகளை வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் “மாலைநேர மல்லிப்பூ”. சிறுவயதிலேயே பாலியல் தொழிலில் தள்ளப்படும் ஒரு இளம்பெண்ணிற்கும் அவளின் பத்து வயதே ஆன மகனுக்குமான பாசப் போராட்டத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் இப்படம், பாலியல் தொழிலாளர்களுக்கும் அவர்களின் வாடிக்கையாளர்களுக்கும், அவர்கள் குடியிருக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கும், சக பாலியல் தொழில் செய்யும் தோழிகளுக்கும் இடையே உள்ள உறவையும் மிக ஆழமாக பேசுகிறது. பிரபல தியேட்டர் ஆர்ட்டிஸ்டான வினித்ரா மேனன்  முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். குழந்தை நட்சத்திரம் அஸ்வின் பத்து வயது மகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நாய்து டோர்ஜி ஒளிப்பதிவு செய்ய, ஹர்திக் சக்திவேல் இசையமைத்திருக்கிறார். விஜயலெட்சுமி நாராயணன் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் படத்தை பார்த்து ரசித்த இயக்குநர்கள் கலந்துகொண்டு பட்த்தையும் இயக்கு நரையும் வெகுவாகப்புகழ்ந்தனர்.

இயக்குநர் வசந்த், “இயக்குநர் சஞ்சய் நாராயணன் 21 வயசுலயே நினைக்க முடியாத ஒரு சப்ஜெக்ட பர்ஸ்ட் படத்துல எடுத்திருக்கிறார். என்னோட கேளடி கண்மணி படத்துக்கு ஆனந்த விகடன்ல அப்ப துணை ஆசிரியராக இருந்த மதன் சார்  விமர்சனத்துல ஒரு வரி எழுதி இருந்தாரு. “ஒரு குழந்தை டிராக்டர் ஓட்டுகிறது” அப்டின்னு. எனக்கு அப்ப அது புரியல.. ஏன் அப்படி எழுதியிருக்கீங்கன்னு கேட்டேன்.. அப்ப அவரு சொன்னாரு, மத்த வண்டியெல்லாம் ஓட்டிரலாம். டிராக்டர் ஓட்டுறது ரொம்ப கஷ்டம். அதனால தான் அந்தப் பாராட்டுன்னு சொல்லிருந்தாரு. அந்தப் பாராட்டு இந்தப் படத்துக்கும் பொருந்தும்னு நினைக்கிறேன். “நாமெல்லாம் ரொம்ப காலம் உதவி இயக்குநராகவே கழித்து விட்டோம்” என்று கே எஸ் ரவிக்குமாரும் நானும் சிரித்துக் கொண்டோம். இந்தப் படத்தோட இயக்குநரைப் பாராட்டுவது போலவே இப்படத்தை தயாரித்திருக்கும் இயக்குநரின் தாய் விஜயலெக்ஷ்மி அவர்களுக்கும் என் பாராட்டுக்கள். ஏன் என்றால் மகனின் முதல் படம், தலைப்பு ‘மாலை நேர மல்லிப் பூ” அதைப் புரிந்து கொண்டு அவர்களின் தாய் அதை தயாரிப்பதென்பது மிகப் பெரிய விசயம். வினித்திரா மிகச் சிறந்த நடிகை. இப்படத்திற்கு அவர்களும் மிகப் பெரிய சப்போர்ட்டாக இருப்பார்கள் என்று நம்புகிறேன். எனக்கு கதை எழுதும் போது ஏதாவது ப்ளாக் ஏற்பட்டால் சென்னை கிறிஸ்டின் காலேஜ் தான் போவேன். அங்க இருக்குற ஏராளமான மரங்கள் தான் எனக்கு கதை சொல்லும். அந்தக் காலேஜ்ல தான் இந்த இயக்குநர் படிச்சிட்டு வந்திருக்காரு, அதனால அந்த மரங்கள் அவருக்கு ஏராளமான கதைகளை சொல்லி இருக்கும்.” என்று பேசினார்.

’நெடுநல்வாடை’ பட இயக்குநர் செல்வக்கண்ணன், “ இந்தப் படத்தோட கிளிப்பிங்க்ஸ் விஷ்வல்ஸ் பார்க்கும் போது ரொம்ப சர்ப்ரைஸ் ஆக இருந்தது. நிச்சியமாக இளம் இயக்குநர் சஞ்சய் நாராயணனிடம் நாங்கள் இதை எதிர்பார்க்கவில்லை. ஏதாவது ஒரு சப்ஜெக்ட் எடுத்துக்கிட்டு அதை ஒரு உப்புமா படம் போல பல பேர் எடுத்து வைப்பாங்க. ஆனா இந்தப் படம் அப்படி இல்லை. டெக்னிக்கலாவும் நல்ல ஸ்டிராங்கான படமாத் தெரியுது. ரொம்ப நல்லா பண்ணிருக்காங்க.. நான் இந்தப் படத்தோட ஒளிப்பதிவாளரப் பாத்து சிரிச்சிக்கிட்டே இருந்தேன்.. ஏன்னா எல்லாரும் பாக்குறதுக்கு ரொம்ப சின்ன பசங்களா இருக்காங்க.. அப்டியே ஸ்கூல்ல இருந்து வந்தவுங்க மாதிரியே இருக்காங்க.. பட் அவுங்க படைப்பை பார்த்தால் பிரமிப்பாக இருக்குது. நம்பவே முடியல. அம்மாவுக்கும் பையனுக்குமான உறவை சொல்லுகிற படத்தை இயக்குநரின் அம்மாவே தயாரித்து இருக்கிறார். அது மிகவும் அழகான விசயம். மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. ஏனென்றால் இது போன்ற அம்மா எல்லாருக்கும் கிடைக்காது.” என்றார்.

படத்தின் இயக்குநர் சஞ்சய் நாராயணன், “ இது ஒரு சின்ன படம், உங்கள் ஆதரவை எங்களுக்குக் கொடுப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். எங்கள் படக்குழுவினர் அனைவருமே எனக்கு மிகச் சிறந்த ஒத்துழைப்பைக் கொடுத்தார்கள்.” என்று பேசினார்.

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்,  “இயக்குநர் பாலச்சந்தர் அரங்கேற்றம் படம் எடுப்பதற்கு முன்னர் பல படங்கள் எடுத்துவிட்டார். ஆனால் இப்படத்தின் இயக்குநர் சஞ்சய் நாராயணன் தன் முதல் படத்திலேயே பாலியல் தொழிலாளியின் வாழ்க்கையில் தாய் மகனுக்கு இடையே இருக்கும் பாசப் பிணைப்பை தன் கதையாக எடுத்திருப்பது பாராட்டத்தக்கது. அந்த தைரியத்திற்கு நான் தலைவணங்குகிறேன். இயக்குநரை முதலில் நேரில் பார்க்கும் போது, அவருக்குள் என்ன மாதிரியான விசயங்கள் இருக்கும் என்பதை என்னால் யூகிக்க முடியவில்லை. இன்று அவர் மேடையில் பேசும் போதும், அவரின் படைப்பைப் பார்க்கும் போதும் பிரமிப்பாக இருக்கிறது. இவருக்கு மிகச் சிறந்த எதிர்காலம் இருக்கிறது. இயக்குநர் வசந்த் கூறியது போல், ஒவ்வொரு காட்சியிலும் கணம் இருந்தது. கதைக்கருவிற்கு காட்சிகள் வலு சேர்க்கிறது. நாயகி மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.” என்று கூறினார்.

நாயகி வினித்ரா மேனன் பேசும் போது, “இந்த படக்குழுவைப் பார்க்கும் போது இவர்களை நம்பலாமா..? என்று தோன்றியது. ஏனென்றால் என்னைவிட அனைவரும் இளையவர்களாக இருந்தார்கள். ஆனால் கதையை படித்ததும் மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டது. அது போல் இயக்குநரின் அம்மா இப்படத்தின் தயாரிப்பாளர் மட்டும் இல்லை. இப்படத்தின் எல்லா துறைகளிலும் அவர்கள் பணியாற்றினார்கள். உணவு தயாரிப்பது, ஆர்ட் டிப்பாட்மெண்டில் உதவுவது, காஸ்ட்யூம் ரெடி செய்வது இப்படி இப்படத்தின் முதுகெலும்பாக இருந்தவர்கள் அவர்கள் தான். மொத்தமே எங்கள் யூனிட்டில் ஒரு பத்து பேர் தான் இருப்போம். நான் எனது கதாபாத்திரத்தை மிகவும் விரும்பி செய்திருக்கிறேன். மிகவும் சவால் நிறைந்த கதாபாத்திரம். அதை எடுக்கும் போது பல தருணங்களில் நாங்கள் எல்லோருமே உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறினோம். என்னால் முடிந்த அளவிற்கு இப்படத்தில் நான் சிறப்பாக நடித்திருக்கிறேன்..” என்று பேசினார்.

இயக்குநர் சுப்ரமணிய சிவா,, “ஊரில் ‘டேய் இதெல்லாம் சின்னப் பசங்க பாக்குற வேலையாடா..? என்று பேசுவார்கள். ஆனால் இது போன்ற படங்களை சின்ன வயதில் தான் எடுக்க வேண்டும். ஏனென்றால் சின்ன வயதில் காமம் காதல் வந்தால் தான் அது சரி. ஒரு வயதுக்கு மேல் காதல் காமம் வந்தால் அது மனநோய். ஆக இது தான் காதல் மற்றும் காமத்திற்கான வயது. எனவே அந்த வயதிற்கான படத்தையே சஞ்சய் நாராயணன் எடுத்திருக்கிறார். நம் தமிழ் திரையுலகின் கமர்ஸியல் மாஸ்டர் என்றால் அது இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், கிளாசிக் மாஸ்டரான இயக்குநர் வசந்த் இருவரின் பாராட்டையும் இப்படம் ஒருங்கே பெற்றிருப்பதால் இந்தநாள் சிறப்பு வாய்ந்தது. தமிழ்நாட்டில் ஒரு இலட்சம் பாலியல் தொழிலாளர்கள், இந்தியாவில் 30 இலட்சம் பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாக புள்ளி விவரம் கூறுகிறது. இதற்கு முழுக் காரணம் வறுமை. இதனால் பாதிக்கப்படும் ஆண் வன்முறையை நோக்கியும் பெண் பாலியல் தொழில் நோக்கியும் போகிறாள். பாலியல் தொழில் என்பது ஆதித் தொழில். நம்முடைய தமிழ் புராணமான சிலப்பதிகாரத்தில் வரும் மாதவி கதாபாத்திரம், புகார் நகரில் இருந்த பெரிய பாலியல் தெருக்கள் போன்ற குறிப்புகள் எல்லாம் நாம் அறிவோம். ஆக அப்போது இருந்த ஒரு ஆதித் தொழில் இன்றைய 5G யுகத்தில் எப்படி இருக்கிறது என்பதைத் தான் இயக்குநர் கூறியிருக்கிறார்.  ஒவ்வொரு சமூகத்திலும் தாய் என்பவள் மிகவும் வலிமையானவள்; அவளை நாம் அடக்கித் தான் வைத்திருக்கிறோம். அவள் தாயோ, மனைவியோ, மகளோ, தோழியோ நாம் அடக்கித் தான் வைத்திருக்கிறோம். இப்படத்திலும் அப்படித்தான் வலிமையான தாய் தன் மகனின் சிறந்த எதிர்காலத்திற்காக எப்படி போராடுகிறாள் என்பதே கதை. சிலப்பதிகாரத்தில் மாதவியும் தன் மகள் மணிமேகலைக்கும் அதையேதான் செய்தாள். ஆக பாதிக்கப்படும் பெண்களின் சார்பாக பேச வேண்டியது ஒரு எழுத்தாளனின் ஒரு படைப்பாளியின் கடமை. அந்த கடமையை நிறைவேற்றும் படைப்பாகத்தான் இப்படம் இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த இயக்குநரின் முதல் படத்திலேயே இவரின் புத்திசாலித்தனம் தெரிகிறது. இதனை பணமாக மாற்ற வேண்டும். அரசு கல்லூரிகள் இருக்கும் வரை மாணவர்களிடம் போராட்டக் குணமும், சமூக அக்கறையும் இருந்தது. ஆனால் எப்பொழுது இன்ஜினியரிங் கல்லூரிகளாக அவை மாறியதோ அப்போதே அவர்களிடம் போராட்டக் குணம், சமூக அக்கறை போன்றவை தொலைந்து போய் காசு சேர்க்கும் ஆசை மட்டுமே எஞ்கி இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். இந்த இயக்குநர் தாயின் பிள்ளையாக இருப்பதால் இவர் மனித நேயத்தோடு தான் படம் எடுத்திருப்பார். இப்படம் நிச்சயமாக பேசப்படும் என்று நம்புகிறேன்..” என்று பேசினார்.

<< Previous

Next >>

Related News

Beautifully concluded 8th CIFF

4 years ago

”நண்பேன்டா..” கமல்-ரஜினி

4 years ago

Chennai Super Stars of CCL

4 years ago

Chennai Super Stars of CCL

4 years ago

சர்ச்சைக்குரிய மன்மதன் அம்பு படப்பாடல் நீக்கம்

4 years ago

Siruthai Audio & Trailer launched

4 years ago

Comments

தமிழ்
  • Home
  • About Us
  • Terms & Conditions
  • News
  • Reviews
Copyright 2017 © Mysixer.com. Ltd. All Rights Reserved.