செயிண்ட் ஜார்ஜ் பிக்சர்ஸ் K.E.எட்வர்ட் ஜார்ஜ் தயாரிப்பதோடு மட்டுமல்லாமல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் “ கண்களை மூடாதே “
நாயகியாக சித்ராய் மற்றும் போண்டாமணி, பயில்வான் ரங்கநாதன் கிங்காங், சின்னதம்பி, மார்த்தாண்டம் ஆகியோர் நடிக்கும் இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார் திஷாத் சாமி.அந்தோணி பிச்சை, எஸ்.ராயப்பன் ஆகியோரின் துணை இயக்கத்தில் உருவாகும் கண்களை மூடாதே படத்தினை தமிழ்மணி சங்கர் எடிட்டிங் செய்கிறார்.
கண்களை மூடாதே பற்றி இயக்குநர் கூறியபோது, “முற்றிலும் வித்தியாசமான காதல் கலந்த குடும்பக்கதை தான் இந்த படம். திருமணத்திற்கு பிறகு கணவன், மனைவி எப்படியெல்லாம் இருக்கவேண்டும், நம் பாரம்பரியம் என்ன என்பதை உணர்த்துவதாகத் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. படம் பார்க்கிற ஆண்கள், நமக்கு இது போல மனைவி கிடைக்காதா என்றும் பெண்கள், இதுபோல் கணவன் அமைந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்றும் ஏங்கப்போவது நிச்சயம்…” என்றார்.
திருநெல்வேலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படம்பிடிக்கப்பட்ட கண்களை மூடாதே வரும் பிப்ரவரி 28 இல் வெளியாகிறது.