உலகின் மாபெரும் இதிகாசங்களில் ஒன்று மஹாபாரதம், கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களுக்கிடையேயான குருக்ஷேத்ரப் போரை விவரிக்கும் இந்த இதிகாசம் இந்தியா மட்டுமல்லாத உலகம் முழுவதிலும் பலராலும் விரும்பிப் படிக்கப்படுகிறது, மஹாபாரதத்தில் வரும் குருக்ஷேத்ரப் போரினை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட பிரமாண்ட படம் தான் 'குருக்ஷேத்ரம்'.
சர்வதேசத்தரத்தில் 3D முறையில் உருவாகியுள்ள இந்தப் படத்தை விருஷபாத்ரி புரொடக்ஷன் உடன் இணைந்து வி கிரியேஷன்ஸ் கலைப்புலி S தாணு வழங்குகிறார். இந்தப் படம். தமிழ் , தெலுங்கு , ஹிந்தி , கன்னடம் , மலையாளம் என ஐந்து மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மஹாபாரத இதிகாசத்தில் வரும் கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களின் வீரம் மற்றும் பண்புகளால் கவரப்பட்ட நாகன்னா இந்தப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் பீஷ்மராக அம்பிரிஷ், துரியோதனன் ஆக தர்ஷன், கர்ணனாக அர்ஜுன் சார்ஜா, அர்ஜுனனாக சோனு சூட், சகுனியாக ரவி ஷங்கர், திரௌபதியாக ஸ்நேகா மற்றும் ,கிருஷ்ணராக வி. ரவிச்சந்தர் என பிரபல நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறது.
இந்த மாபெரும் இதிகாசத் திரைப்படத்திற்கு ஹரி கிருஷ்ணா இசையமைத்துள்ளார்.
ஐெயனன் வின்சென்ட் ஒளிப்பதிவையும் ஜோ. நி.ஹர்ஷா எடிட்டிங்கையும் கையாண்டுள்ளனர். இந்தப்படத்தின் கதையை எழுதிய முனி ரத்னாவே படத்தை பிரமாண்டமாகத் தயாரித்தும் உள்ளார்.
ஆகஸ்ட் மாதத்தில் இந்தப்படம் வெளியாக இருக்கிறது.