யோகிபாபுவின் சமீபத்திய வெற்றிப்படங்களான தர்மபிரபு, கூர்கா, ஜாம்பி ஆகிய படங்களைத் தொடர்ந்து அவர் சமையல்காரராக நடித்திருக்கும் "பட்லர் பாலு" இந்த மாதம் 8 ஆம் தேதி வெளியாகிறது. தமிழகமெங்கும் முகேஷ் பிலிம்ஸ் வெளியிடும் இந்தப்படத்தில் யோகிபாபுவுடன் இமான் அண்ணாச்சி, மயில்சாமி, ரோபோசங்கர், தாடிபாலாஜி ஆகியோரும் இணைந்து காமெடி கலாட்டா செய்திருக்கிறார்கள்.
நடிகர் நாகேஷுக்கு சர்வர் சுந்தரம் படம் மிக முக்கியமான படமாக அமைந்ததோ அதுபோல் யோகிபாபு, கல்யாண வீடுகளில் சமையல் செய்யும் சமையல்காரராக நடித்திருக்கும் ”பட்லர் பாலு“ முக்கியமான படமாக அமையும் என்கிறார் இயக்குநர் சுதிர்.M.L.தொடர்ந்து படத்தைப் பற்றிக்கூறிய அவர், “இதுவரை ஏற்காத ஒரு வேடத்தில் யோகிபாபு தோன்றுகிறார். சமையல் வேலைக்காகச் சென்ற திருமண மண்டபத்தில் மணப்பெண்ணை யோகிபாபுவின் நண்பர்கள் கடத்தி விடுகிறார்கள். அதனால் போலீஸ் அவரை கைது செய்துவிடுகிறது. போலீசிடம் இருந்து எப்படி வெளியே வருகிறார் என்பதை ஒரு இரவுக்குள் நடக்கும் படி கலகல காமெடி கலந்த படமாக “ பட்லர் பாலு உருவாகியுள்ளது. ..” என்றார்.
அனைவரும் குடும்பத்துடன் பார்க்கலாம் அந்த அளவிற்கு காமெடி கலாட்டாவாக இருக்கும். படத்தை முகேஷ் பிலிம்ஸ் நிறுவனம் நவம்பர் 8ம் தேதி உலகமெங்கும் அதிகமான திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியிடுகிறது.
S.P.ராஜ்குமார் வசனம் எழுத, கணேஷ் ராகவேந்திரா இசையமைத்திருக்கும் பட்லர் பாலுவுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார், பால் லிவிங்க்ஸ்டன்
தோழா சினி கிரியேஷன் கிருத்திகா இந்தப்படத்தை தயாரித்திருக்கிறார்.