https://www.youtube.com/watch?v=b4SqEAAh-_sஇந்தக் கோடை விடுமுறை பெரியவர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதற்காகவும், குடும்பத்தினரின் பொழுது போக்கிற்காகவும் ப்ரைம் வீடியோ "ஓ மை டாக்” பட டிரெய்லரை வெளியிடுகிறது.
குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி தரும் இந்த படம், ஏப்ரல் 21 அன்று இந்தியாவிலும், 240 உலக நாடுகளிலும் மற்றும் பல பிரதேசங்களிலும் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.
சரோவ் சண்முகம் எழுதி இயக்க,2D என்டர்டெய்ன்மென்ட் தயாரித்திருக்கும்‘ஓ மை டாக்’, மூன்று தலைமுறைகளைப் பற்றியது. குடும்பப் பாங்கான இப்படத்தில் நிஜத்தில் மூன்று தலைமுறை நடிகர்களான விஜயகுமார், அருண் விஜய் மற்றும் அர்னவ் விஜய் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இவர்களுடன் மஹிமா நம்பியார் மற்றும் வினய் ராய் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
இப்படத்தைப் பற்றி நடிகரும், படத் தயாரிப்பாளரும், 2டி என்டெர்டெய்ன்மென்டின் நிறுவனருமான சூர்யா அவர்கள் பேசுகையில், “ஓ மை டாக்- ஒரு மனிதன், அவனுடைய நெருங்கிய நண்பனுக்கிடையே நடக்கும் முக்கியமான மதிப்பு, காதல், நட்பு, அன்பு ஆகியவைகள் உள்ளத்தைத் தொடுமாறு இந்த படம் அமைந்துள்ளது. ஒவ்வொரு குடும்பத்தினரும், முக்கியமாகக் குழந்தைகளும் சேர்ந்து கண்டுகளிக்க வேண்டிய படம். உணர்வுப் பூர்வமான இந்த படம் தொலை தூரத்திலிள்ள அனைவரும் பிரைம் வீடியோ மூலம் கோடை விடுமுறையில் குழந்தைகளை மகிழ்விக்கும்." என்றார்.
அருண் விஜய் பேசும் போது, "ஓ மை டாக்" படம் எனது சொந்த தொழில் மற்றும் அடையாளத்தைத் காட்டும். எனது குடும்பத்தைப் பற்றியும் பல காரணங்களுடன் தொடர்புள்ளது . இப்படத்தின் மூலம் என்னுடைய அப்பா, என் மகன். அர்னவ்வின் ( அறிமுகம்) அப்பாவாக வருவது மட்டுமல்லாமல் நான் ஒரு அப்பாவாகவும் இருப்பதால் என் மனம் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறது. அர்னாவின் அப்பாவாக இந்த படத்தில் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம், ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இந்த படம் உண்மையான என்டெர்டெய்னர் மட்டுமின்றி, குழந்தைகள் தம் விஸ்வாசம், அறியாமை மற்றும் பல குணாதிசயங்களை தமக்குள் ஏற்படுத்திக் கொள்ள மிகுந்த சான்றாக அமையும் என நான் கருதுகிறேன்" என்று கூறினார்.
இயக்குநர் சரோவ் சண்முகம் கூறுகையில்,-" ஓ மை டாக் படம் உணர்ச்சிகள் ததும்பும் ஓர் உன்னதப் படம். இப்படம், குழந்தைகளாக, நாம் கற்றுக் கொண்ட பாடங்களை பெரியவர்களாக நாம் வளர்ந்துவிட்ட பிறகு, நமது பல வித பொறுப்புகளினால் மறந்துவிடுவதை அலசுகிறது. இது குழந்தைகளின் சக்திவாய்ந்த மனோதிடமும், மதிப்புகளும்ம் பெரியவர்களுக்கு வழிகாட்டிகளாக அமைகிறது என்பதையும் காட்டுகிறது. விஜயகுமார் , அருண் விஜய் மற்றும் அர்னவ் ஆகியோருடன் பணியாற்றுவது மிகவும் உற்சாகமாக உள்ளது. மூன்று தலைமுறைகள் கொண்ட அந்த குடும்பத்தின் திறமையான நடிப்பினை நாம் இதில் காணமுடிகிறது." என்றார்.
ட்ரெய்லரை இங்கே காணுங்கள்
இப்படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைக்க . ஒளிப்பதிவு செய்திருக்கிறார் கோபிநாத் .
கதைச் சுருக்கம் :
“ஓ மை டாக்" பார்வையற்ற நாய்க்குட்டி சிம்பா மற்றும் அர்ஜூன் ஆகியோருக்கிடையே நடக்கும் உணர்வு அடிப்படையாகக் கொண்டு விளங்குகிறது. அர்ஜூன் சிம்பாவைக் காப்பாற்றியதின் மூலம் அவருக்கு சொந்தமாகவே ஆகிவிடுகிறது. இந்த படம் அர்ஜூன் மற்றும் சிம்பாவின் நெருக்கடிகள் மற்றும் பல வித சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு நகர்ந்து, நம் ஒவ்வொருவரின் இதயத்தையும் சுற்றி வலம் வருகிறது.