DON பட டிரையலர் வெளியீட்டு விழாவில் தமிழ் சினிமாவின் DON சிவகார்த்திகேயன் என்று மனதார வாழ்த்தினார் உதய நிதி ஸ்டாலின்
LYCA PRODUCTIONS சுபாஸ்கரன் மற்றும் SIVAKARTHIKEYAN PRODUCTIONS இணைந்து தயாரிக்கும், அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள DON படத்தை உதய நிதி ஸ்டாலினின் ரெட்ஜயண்ட் மூவீஸ் மே 13 இல் வெளியிடுகிறது. டாக்டர் படத்தின் வெற்றி ஜோடியான பிரியங்கா அருள் மோகன் இதிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ராதாரவிம் SJ சூர்யா, சமுத்திரக்கனி, பாலா, ராஜு, சிவாங்கி ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
இப்படத்தின் டிரைலர் வெளியீடு ஜேப்பியர் பொறியியல் கல்லூரியில் கல்லூரி மாணவர்களின் பெரும் ஆரவாரத்துக்கு மத்தியில் நடைபெற்றது.
இவ்விழாவினில் பேசிய
LYCA PRODUCTIONS தமிழ் குமரன் கூறியதாவது...
சிவகார்த்திகேயனின் முந்தைய படமான ‘டாக்டர்’ பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூல் செய்ததது, ‘டான்’ படமும் அந்த சாதனையை நிகழ்த்தும். அனிருத் அனைவரையும் கவரும் படியான பாடல்களை வழங்கியுள்ளார்.
கலை அரசு, இணை தயாரிப்பாளர், SIVAKARTHIKEYAN PRODUCTIONS பேசியது
இந்த படத்தை தொடங்குவதற்கு முன்பே, சிவகார்த்திகேயன் என்னிடம், நாம் LYCA PRODUCTIONS உடன் இணைந்து பணியாற்ற போகிறோம், அவர்களுக்கு நல்ல லாபத்தை தர வேண்டும் என்று கூறினார். டான் மூலம் அவர்களுக்கு படம் வெளியாகும் முன்பே லாபம் கிடைத்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். டான் அனைவருக்குமான பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும். ‘டாக்டர்’ படத்தில் சிவகார்த்திகேயனை டாக்டராகப் பார்த்தீர்கள், டான் திரைப்படத்தில் பி.இ., பேச்சுலர் ஆஃப் எண்டர்டெயின்மெண்ட் - ஆக பார்ப்பீர்கள்"
தயாரிப்பாளர் மற்றும் நடிகர் உதயநிதி ஸ்டாலின், Red Giant Movies, பேசியது.,
"ஒட்டு மொத்த டான் படக்குழுவையும் நான் வாழ்த்த விரும்புகிறேன். தமிழ் சினிமாவில் இப்போது இரண்டு டான்கள் உள்ளனர், ஒன்று சிவகார்த்திகேயன், மற்றொன்று அனிருத். அவர்கள் இருவரும் மிகப்பெரிய வெற்றிகளை குவிக்கின்றனர், மேலும் அவர்களது காம்பினேஷன் நிச்சயமாக வெற்றியை தரக்கூடியது. ரீ-ரிக்கார்டிங் செய்யவதற்கு 10 நாட்களுக்கு முன்பே நான் படத்தை பார்த்துவிட்டேன். டாக்டரை விட இந்த படம் பெரிய வெற்றி பெறும் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது. பலர் இந்த திரைப்படத்தை கல்லூரி பின்னணி கதை என்று கருதியிருக்கலாம், ஆனால் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா அருள் மோகன் ஆகியோருடன் ஒரு அழகான பள்ளி பகுதி இந்த படத்தில் உள்ளது. எஸ்.ஜே.சூர்யா கல்லூரிப் பகுதிகளில் சிறப்பான பணியைச் செய்துள்ளார், சமுத்திரக்கனி கடைசி 30 நிமிடங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
நடிகர் சமுத்திரகனி கூறியதாவது...
ஆரம்பத்தில், இந்த திரைப்படத்தில் ஒரு பகுதியாக இருக்க எனக்கு விருப்பம் இல்லை, ஏனெனில் இந்த திரைப்படத்தில் பல காட்சிகள் என்னை உணர்ச்சிவசப்பட வைத்தது. கோபத்தை வெளிப்படுத்த வேண்டிய பல காட்சிகள் இருந்தன, என்னால் அதைச் செய்ய முடியவில்லை. சிபி ஸ்கிரிப்டை சொன்ன போது, அது என் வாழ்க்கையை மீட்டெடுத்தது போல் இருந்தது. சிபி இப்படம் மூலம் பெரிய உயரத்தை எட்டப் போகிறார், மேலும் பார்வையாளர்களுக்கு இந்த திரைப்படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தப் படத்தின் மூலம் என் அப்பா எனக்குள் நுழைந்தது போல் இருந்தது. டான் ஒரு பிளாக்பஸ்டராக இருக்கும், மேலும் சிவகார்த்திகேயன் இந்தியத் திரையுலகின் தவிர்க்க முடியாத ஹீரோவாக இருப்பார். இப்படத்தில் ஒட்டுமொத்த தொழில்நுட்பக் குழுவும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். அனிருத் நாடு முழுவதும் அறிந்த ஒரு சிறந்த இசையமைப்பாளராகிவிட்டார். பிரியங்கா பக்கத்து வீட்டுப் பெண்ணைப் போலவே இருக்கிறார், அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. சிவகார்த்திகேயன் இன்னும் உயரத்திற்கு செல்ல அனைத்து ரசிகர்களும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
SJ சூர்யா பேசியது...
இந்தக் கல்லூரியில் உள்ள மாணவர்கள் உடைய அனுபவங்கள் டான் படத்தின் பிரதிபலிப்பாக இருக்கும். இந்த கோடைகாலத்தில் பல படங்கள் வெளியாகி இருக்கலாம், ஆனால் டான் 100% ஒரு கோடை விருந்தாக இருக்கும். மெர்சல் படத்தின் இணை இயக்குநராக இருந்தபோதே சிபி சார், என் மீது மிகுந்த அக்கறையுடன் இருந்தார். அவர்தான் தமிழகத்தின் ராஜ்குமார் ஹிரானி. இந்தப் படத்தில் சமுத்திரக்கனி அற்புதமாக நடித்துள்ளார். சிவகார்த்திகேயனின் கடின உழைப்பும், நல்ல குணமும் அவரை மேலும் உயரத்திற்கு கொண்டு செல்லும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்
நடிகை பிரியங்கா அருள் மோகன் கூறியதாவது...
இந்த படத்தில் பணிபுரிந்ததன் மூலம் எனக்கு வாழ்நாள் முழுவதும் தொடரும் ஒரு அழகான நட்பு வட்டாரம் கிடைத்தது. என் கல்லூரி நாட்களை மீண்டும் ஒருமுறை பார்ப்பது போல் இருந்தது. சமுத்திரக்கனி மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோருடன் பணிபுரிந்தது, சிறந்த அனுபவமாக இருந்தது. அனிருத்தின் பாடல்களுக்கு அற்புதமான நடனத்தை படத்தில் அமைத்திருக்கிறார்கள் ஷோபி மற்றும் லலிதா. நன்றி. டான் திரைப்படம் குடும்பங்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து பார்க்க வேண்டிய ஒரு வேடிக்கை நிறைந்த பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும்.
இயக்குனர் சிபி சக்ரவர்த்தி பேசியது...
இவ்வளவு பெரிய நட்சத்திர நடிகர்களைக் கையாளும் அளவிற்கு என்னை தகுதி உடையவனாக மாற்றிய எனது குரு அட்லீக்கு நன்றி. அவர் எனது வழிகாட்டியாக இருந்து, எனக்கு பல அனுபவங்களைப் கற்று தந்தார். சிவகார்த்திகேயனின் ஒரு போன் கால், என் வாழ்க்கையை மாற்றியது. SK வின் வெற்றி நான் உட்பட பலருக்கு உத்வேகம் அளித்துள்ளது. அவரது திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்ற போதிலும், அவர் எப்போதும் பணிவுடன் இருப்பார். படம் தொடங்கிய காலத்திலிருந்தே, கொரோனா பிரச்சனைகள் உட்பட பல சவால்கள் இருந்தன. ஆனால் அந்த நேரத்திலும், அவர் படம் சிறப்பாக உருவாவதற்கான அறிவுரைகளை கொடுத்துக்கொண்டே இருப்பார். டான் படத்தில், SK , நிஜ மற்றும் ரீல்-சக்கரவர்த்தி ஆகிய இருவருக்கும் உயிர் கொடுத்துள்ளார். அனிருத், ஒரு பாசிட்டிவிட்டி நிறைந்த மனிதர், அதை எங்கள் முதல் சந்திப்பிலேயே என்னால் உணர முடிந்தது. எஸ்.ஜே.சூர்யாவும், சமுத்திரக்கனியும் இந்தப் படத்தின் தூண்கள். பிரியங்கா அருள் மோகன் ஒரு நேர்மையான மற்றும் அர்ப்பணிப்புள்ள கலைஞர். டான் திரைப்படம் பார்வையாளர்கள் அனைவருக்கும் வேடிக்கையான மற்றும் அழகான பொழுதுபோக்கு நிறைந்த படமாக இருக்கும்.
நடிகர் சிவகார்த்திகேயன் கூறியதாவது...
சிபி, டான் படத்தின் ஸ்கிரிப்டை கூறியபோது, அது மிகவும் மகிழ்ச்சியாகவும், உணர்வுபூர்வமாகவும் இருந்தது. கல்லூரியில் படிக்கும் ஒவ்வொரு மாணவனையும் பிரதிபலிக்கும் கதை இது, அதை சிபி மிக அழகாக வடிவமைத்துள்ளார். டான் படம் நல்ல வெற்றியடைந்தால், என்னைப் போன்றவர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், புதுமுகங்களுக்கு வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும். நான் மிகவும் ரசித்தவர்களைக் கொண்ட ஒரு குழுவைப் பெற்றதற்கு நான் அதிர்ஷ்டசாலி. இந்தப் படத்தில் சமுத்திரக்கனியின் கதாபாத்திரம் உணர்வுபூர்வமானதாக இருக்கும். எனது கல்லூரி கல்சுரல் நிகழ்ச்சிகளில் SJ சூர்யாவின் குரலில் மிமிக்ரி செய்ய தொடங்கி, அதன் மூலம் பிரபலமானேன். படப்பிடிப்பின் போது கூட இதை அவரிடம் சொன்னேன். படத்தில் எனக்கு அறிமுகப் பாடலும், கதாநாயகியுடன் ஒரு பாடலும் இருப்பதால், நான் ஹீரோ இல்லை. இந்தப் படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு ஹீரோ மற்றும் அவர்களுக்கென்று ஒரு தனி சிறப்புகள் உண்டு. இந்தப் படத்தில் பிரியங்கா சிறப்பாக நடித்துள்ளார். அவர் தமிழ் மொழியை நன்கு அறிந்தவர் என்பதால், இயக்குனருக்கு அவரை நடிக்க வைப்பது எளிதாக இருந்தது, மேலும் அவரால் சிறந்த நடிப்பை வழங்க முடிந்தது. பாலா, ராஜு, ஷாரிக், ஷிவாங்கி, விஜய் மற்றும் பலர் படத்தில் அசத்தியுள்ளனர். அவர்களுடன் நேரம் செலவழிப்பது மகிழ்ச்சியாக இருந்தது, மேலும் எனது கல்லூரிக்கு திரும்புவது போல் இருந்தது. சிவாங்கி இந்தப் படத்தில் அழகான நடிப்பை வழங்கி இருக்கிறார். விலங்கு வெப் தொடரில் பால சரவணனின் நடிப்பு என்னை வியப்பில் ஆழ்த்தியது. தொழில்நுட்பக் குழு இந்த படத்திற்கு ஒரு பெரிய தூணாக இருந்திருக்கிறது. படத்தின் இறுதிக்கட்ட பணிகளை அனிருத் செய்துகொண்டிருப்பதால் இந்த நிகழ்ச்சிக்கு அவரால் வரமுடியவில்லை. அவர் கடந்த ஒரு மாதமாக தனது படங்களுக்காக இரவும் பகலும் தூங்காமல் உழைத்து வருகிறார். எனது படங்களுக்கு அவர் அளித்த ஆதரவு அளப்பரியது. தொற்றுநோயை எதிர்கொள்வதே எங்கள் ஒட்டுமொத்த குழுவினருக்கும் பெரிய சவாலாக இருந்தது. ஏறக்குறைய அனைத்து காட்சிகளும் கல்லூரி கூட்டத்தை உள்ளடக்கியது, மேலும் முழு குழுவினரின் ஒத்துழைப்புடன் மட்டுமே, இந்த காட்சிகளை எந்த தடையும் இல்லாமல் எங்களால் படமாக்க முடிந்தது. இன்று தனது பெற்றோரை பெருமைப்படுத்திய சிபியை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர் தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், மீதமுள்ளவற்றை பார்வையாளர்கள் கவனித்துக்கொள்வார்கள். ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் எங்கள் படத்தை வெளியிடுகிறார், அவர் மூலம் டான் படம் ஒரு பெரிய வெளியீட்டைக் காணப் போகிறது என்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். டான் படத்தில் கனவுகளும் லட்சியங்களும் அவ்வப்போது மாறிக்கொண்டே இருப்பது, எனது குழந்தைப் பருவத்தை மறுபரிசீலனை செய்வது போல் இருந்தது. படம் முடிந்து திரையரங்குகளை விட்டு வெளியில் செல்லும் பார்வையாளர்களுக்கு படம் சில தாக்கத்தை ஏற்படுத்தும்..