இன்று (24.12.2011)எம்.ஜி.ஆரின் 24-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நினைவு நாளையொட்டி அதிமுகவினர், ஜெயலலிதா தலைமையில் உறுதி மொழிகள் ஏற்றுக்கொண்டனர்.
இன்று (24.12.2011)எம்.ஜி.ஆரின் 24-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நினைவு நாளையொட்டி அதிமுகவினர், ஜெயலலிதா தலைமையில் உறுதி மொழிகள் ஏற்றுக்கொண்டனர்.
எம் ஜி ஆர் தனது சுயசரிதயை ஆனந்த விகடனில் தொடராக எழுதி வந்தார்,அதை அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. அடுத்ததாகத் தொடங்கிய ‘எனது வாழ்க்கை பாதையிலே’ தொடரும் முற்றுப் பெறவில்லை.
அவரது புகழ் மறைந்தால் தானே அவரது சுயசரிதை முற்றுப்பெறும். எம்.ஜி,ஆர் என்கிற மூன்றெழுத்து தமிழ் என்கிற மூன்றெழுத்து இருக்கும் வரை நிலைத்து நிற்கும்.
அவரது அரிய புகைப்படங்களைக் கண்டு மகிழுங்கள்.




