நான் இருக்கேன்டா செல்லம் – ஜெயம் ரவி

62

 

சென்னை எம் ஜி ஆர் நகர் ஜெயம் ரவி ரசிகர் மன்றத்தில் தலைவராக இருந்த, சென்னை கே கே நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ராஜா (வயது 33)  சமீபத்தில் உடல் நலக்குறைவால் காலமானார். ஜெயம் ரவி மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவரான ராஜா, ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல நற்பணிகள் செய்து வந்தார்.

தனது ரசிகனின் திடீர் மரணத்தை அறிந்த ஜெயம் ரவி, ராஜாவின் வீட்டுக்குச் சென்று, அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் குடும்பத்திற்கு எந்த உதவியானாலும் தான் செய்து தருவதாக உறுதியளித்தார்.

ரசிகர் ஒருவரின் மர

ணத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செய்ததுடன் நான் இருக்கிறேன் என்று ஆறுதல் சொல்லி வந்த ஜெயம் ரவியின் இந்த செயலுக்கு திரையுலகினர் மட்டுமல்லாது பிற நடிகர்களின் ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் பாராட்டுதலை தெரிவித்து வருகின்றனர்.